Showing posts with label ஒளி தரும் விளக்கு போல்... Show all posts
Showing posts with label ஒளி தரும் விளக்கு போல்... Show all posts

Saturday, May 12, 2012

ஒளி தரும் விளக்கு போல்..

                                                    
            பார்வையற்ற ஒருவன் விளக்கை எடுத்துக்கொண்டு நடந்து போனான். எதிரே வந்தவன், உனக்கு கண் தெரியாதே -எதற்கு விளக்கு? என்று கேட்டான். உனக்குக் கண் இருக்கிறதல்லவா, நீ என்மேல் விழாமல் இருப்பதற்குத்தான் விளக்கு என்றான் அவன். யாருக்கு கண் இருக்கிறதோ அவனுக்கு அது உபயோகப்படுகிறது. நம்முடைய மதங்களுக்கெல்லாம் மூலமான வேதத்தை -நாம் புரிந்துகொண்டாலும் புரிந்துகொள்ளாவிட்டாலும் வரப்போகிற இளைய தலைமுறையினருக்காகவாவது உபயோகப்படட்டும் என்று நாம் காப்பாற்றியாக வேண்டும்.