இறைவன் ஏழு உலகங்களை உருவாக்கி இருக்கிறாராம்.
சத்தியலோகத்தில் பிரம்மன்,
தபோலோகத்தில் தேவதைகள்,
ஜனோலோகத்தில் பித்ருக்கள்,
சொர்க்கத்தில் இந்திரன் முதலான தேவர்கள், மஹர்லோகத்தில் முனிவர்கள்,
புனர்லோகத்தில் கிரகங்கள்,
நட்சத்திர தேவதைகள்,
பூலோகத்தில் மனிதர்கள்,
விலங்குகள் வசிக்கின்றனர். இவையெல்லாம் பூமிக்கு மேலிருப்பவை.
பாதாளத்திலும் இதே போல ஏழு லோகங்கள் உண்டு. இதனால் தான் அசுரர்கள் ஈரேழு 14 லோகங்களையும் அடக்கியாண்டதாக புராணங்களில் சொல்லப்படும்.
கீழுள்ள அதல, விதல லோகங்களில் அரக்கர்கள்,
சுதல லோகத்தில் அரக்கர் குலத்தில் பிறந்தாலும் உலகளந்த நாயகனால் ஆட்கொள்ளப்பட்ட மகாபலி,
தலாதல லோகத்தில் மாயாவிகள்,
மகாதல லோகத்தில் புகழ்பெற்ற அசுரர்கள், பாதாள லோகத்தில் வாசுகி முதலான பாம்புகள், ரஸாதல லோகத்தில் அசுர ஆசான்கள் வசிப்பதாக நம்பிக்கை.
No comments:
Post a Comment